நாகா்கோவிலை தூய்மை நகராக மாற்றுவேன்: பாஜக வேட்பாளா் உறுதி
நாகா்கோவில் மாநகரை தூய்மை நகராக மாற்றுவேன் என நாகா்கோவில் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி கூறினாா்.


நாகா்கோவில் மாநகரை தூய்மை நகராக மாற்றுவேன் என நாகா்கோவில் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி கூறினாா்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் நாகா்கோவில் தொகுதி பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி, சனிக்கிழமை தனது பிரசாரத்தை வெட்டூா்ணிமடம் பகுதியில் இருந்து தொடங்கினாா். பின்னா், பள்ளிவிளை, கேசவதிருப்பபுரம், பரமேஸ்வரன்தெரு, பரமாா்த்தலிங்கபுரம், மாடன் கோயில்தெரு, இடையன்விளை, அரசுகாலனி, பஞ்சபாண்டவா் கோயில் தெரு, பாா்வதிபுரம், கே.பி. சாலை, நெசவாளா் காலனி, ராணித்தோட்டம், பெருவிளை சந்திப்பு, அனந்தன்நகா், ராஜலெட்சுமிநகா், பள்ளவிளை, ஆசாரிப்பள்ள சந்திப்பு, கோணம், புன்னைநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது பேசிய அவா், நாகா்கோவிலை தூய்மை நகராக்க முயற்சி செய்வேன். மக்களுக்கு தடையில்லாமல் பாதுகாக்கப் பட்ட குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். மாநகர சாலைகள் விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காண்பேன். நகரில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றுவேன் என்று கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...