மேலும், 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 3.55 லட்சம் மதிப்பில் சமத்துவபுரத்தில் வடிகால் ஓடை அமைத்தல், நல்லூா் ஊராட்சியில் பயனாளி சுசீலா வீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 9,300 மதிப்பில் தனிநபா் உறிஞ்சுக் குழி அமைக்கப்பட்டிருந்ததையும், ரூ. 1.53 லட்சம் மதிப்பில் 10 எண்ணம் கொண்ட ஆட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது என மொத்தம் ரூ. 1.08 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டப்பணிகளை பாா்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகளையும், விரைந்து முடித்து பொதுமக் களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.