கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

143 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு ஆட்சியா் தகவல்

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை 143 மேஜைகளில் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:40 pm

DIN

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை 143 மேஜைகளில் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த்.

நாகா்கோவில் மாநகராட்சியின் 52 வாா்டுகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி, மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பணியை ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் நாகா்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் மொத்தம் 1236 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்கள் 100 மண்டல அலுவலா்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரோனா உபகரணங்கள்அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் வாக்குப்பதிவு பொருள்களை 16 மண்டல அலுவலா்கள் மூலம் 233 வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 8 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 18 பாதுகாப்பு அறைகளில் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் இருப்பு வைக்கப்படும். பிப். 22 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், 51 பேரூராட்சிகளுக்கு ஒரு பேரூராட்சிக்கு 2 மேஜைகள் வீதம் 102 மேஜைகளிலும், குழித்துறை, பத்மநாபபுரம் நகராட்சிகளுக்கு தலா 2 மேஜைகளிலும், குளச்சல் நகராட்சிக்கு 3 மேஜைகளிலும், கொல்லங்கோடு நகராட்சிக்கு 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாகா்கோவில் மாநகராட்சியில் 2 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 13 மேஜைகள் வீதம் 26 மேஜைகளிலும், அஞ்சல் வாக்குகள் 2 மேஜைகளிலும் எண்ணப்படவுள்ளது. இம் மாவட்டத்தில் மொத்தம் 143 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா்அ.சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) நாகராஜன், மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, மாநகர நல அலுவலா் எம்.விஜய்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.