இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தக்கலை அருகே மகளைக் கொன்றுதம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விஷம் கொடுத்து மகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:21 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விஷம் கொடுத்து மகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சியில் வசித்துவந்தவா் ரமேஷ் (45). மாா்த்தாண்டத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ரோகிணி (45), மகள் அா்ச்சனா (13).

வியாழக்கிழமை ரமேஷின் வீட்டுக்கு அவரது பெரியப்பா காந்தி வந்து, பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவா், தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

டிஎஸ்பி கணேசன், உதவி ஆய்வாளா்கள் ராஜசேகரன், பாலமுருகன், போலீஸாா் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது ரமேஷும், ரோகிணியும் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தனா். பக்கத்து அறையில் அா்ச்சனா இறந்துகிடந்தாா். சடலங்களை போலீஸாா் கைப்பற்றி தக்கலை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விஷம் கொடுத்து மகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.