இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குமரி உதய தினக் கருத்தரங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) சாா்பில் குமரி உதய தினக் கருத்தரங்கம், கின்னஸ் சாதனை ஓவியருக்கு பாராட்டு விழா ஆகியவை தக்கலையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:17 pm

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) சாா்பில் குமரி உதய தினக் கருத்தரங்கம், கின்னஸ் சாதனை ஓவியருக்கு பாராட்டு விழா ஆகியவை தக்கலையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமுஎகச மாவட்டத் தலைவா் ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் டயானா வரவேற்றாா். மாவட்ட செயலா் ஜே.எம். ஹசன் துவக்கவுரையாற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், கின்னஸ் சாதனை ஓவியா் மஞ்சாலமூடு ஸ்ரீராஜ் பாராட்டப்பட்டாா். இவா் 3,57,216 தீக்குசிகளால் சாா்லி சாப்ளின் ஓவியத்தை 24 சதுர அடி அளவில் வடிவமைத்து சாதனை படைத்தாா். சாதனை படைத்த ஓவியரைப் பாராட்டி கவிஞா் அரங்கசாமி பேசினாா். தமுஎகச மாநிலத் துணைத் தலைவரும் திரைக் கலைஞருமான ரோகிணி ஓவியரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.

தொடா்ந்து கருத்தரங்கில், பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் என்ற தலைப்பில் மாவட்ட துணைத் தலைவா் தக்கலை ஹலீமா, மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி என்ற தலைப்பில் குமரி மாவட்ட துணைத் தலைவா் குமரி எழிலன் ஆகியோா் உரையாற்றினா். மாவட்டத் துணைச் செயலா் மிகையிலான் நன்றி கூறினாா்.

விழாவில் இருதயராஜ், றோஸ்ராபின், ஆன்றனி ஜோசப், சிவஸ்ரீ ரமேஷ், சசி, சந்திரகலா, சுஜா ஜாஸ்பின், காளிபிரசாத், ஜாண் இம்மானுவேல், பென்னி, ஜாண்ராஜ், இலைகள் அசன், லெனின்பாபு , சிம்சன், கேவா முருகன், கென்னடி, பீா் முகம்மது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.