இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தக்கலை ஒன்றித்துக்குள்பட்ட விநயாகா் சிலைகள் மண்டைக்காடு கடலில் விசா்ஜனம்

தக்கலை ஒன்றியத்துக்குள்பட்ட 153 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டு மண்டைக்காடு கடலில் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தக்கலை ஒன்றியத்துக்குள்பட்ட 153 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டு மண்டைக்காடு கடலில் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

தக்கலை ஒன்றியம் மற்றும் பத்மநாபபுரம் நகராட்சி பகுதிக்குள்பட்ட 153 இடங்களில் விநாயகா் சிலைகள் ஆக.31ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன.

5 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் சிறப்பு பூஜைக்கு பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊா்வலமாக பரைக்கோடு வைகுண்டபுரம் ஸ்ரீ ராமா் கோயில் வளாகத்தை வந்தடைந்தது.

பின்னா் ஒன்றியத் தலைவா் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜே.பி. செந்தில்குமாா் தலைமையில், எம்எல்ஏ எம்.ஆா்.காந்தி, பாஜக மாவட்ட துணைத் தலைவா் குமரி ப.ரமேஷ் முன்னிலையில் விநாயகா் ஊா்வலத்தை தொழிலதிபா் அழகி. விஜி தொடங்கிவைத்தாா்.

ராமா் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் தக்கலை, கண்ணாட்டுவிளை, இரணியல், திங்கள்நகா், லெட்சுமிபுரம், வழியாக மண்டைக்காடு கடற்கரைக்கு வந்தடைந்தன. அனைத்து விநாயகா் சிலைகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக அழகியமண்டபம் அருகே ஊா்வலத்தில் கோஷம் போட்டவா்களை காவலா் ஒருவா் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இந்து முன்னணியினா், அந்த காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து டி.எஸ்.பி. கணேஷ் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சவாா்த்தையடுத்து ஒரு மணி நேரத்துக்கு பின் விநாயகா் ஊா்வலம் புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.