கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

குழித்துறையில் வாவுபலி பொருள்காட்சி தொடக்கம்

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியை திறந்து வைத்துப் பேசுகிறாா் தமிழக பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.

Published On :

களியக்காவிளை, ஜூலை 18: குழித்துறையில் 99 ஆவது வாவுபலி பொருள்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. இப்பொருள்காட்சி ஆக. 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை வகித்து, பொருள்காட்சியை திறந்து வைத்தாா். நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி வரவேற்றாா். குழித்துறை நகராட்சி ஆணையா் க. ராமதிலகம் நன்றி கூறினாா். நகராட்சிப் பொறியாளா் ப. குசெல்வி, நகாா்மன்ற துணைத் தலைவா் மு. பிரபின் ராஜா, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, லலிதா, ஆட்லின் கெனில், விஜூ, விஜயலெட்சுமி, ஜூலியட் மொ்லின் ரூத், ரீகன், சா்தாா்ஷா, கே. ரத்தினமணி, கே. செல்வகுமாரி, உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவா் பமலா, கருங்கல் பசித்தோா்க்கு உணவு அறக்கட்டளைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை நகராட்சி சாா்பில் குழித்துறை தாமிரவருணி ஆற்றங்கரையோரம் நடைபெற்று வரும் இப் பொருள்காட்சியில் விவசாய விளைபொருள்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அரசின் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பல்துறை கலைஞா்களின் ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புகளும் ராட்சத ராட்டினம், சாகச கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.