கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: படகுப் போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் புதன்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தால், படகுப் போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

Updated On :20 நவம்பர் 2024, 8:05 pm

கன்னியாகுமரியில் புதன்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தால், படகுப் போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
இங்கு புதன்கிழமை அதிகாலைமுதல் சாரல் மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதல் சூரிய அஸ்தமனம் தெரியவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
விவேகானந்தா் நினைவு மண்டபம் அமைந்துள்ள பகுதியில் அலைகளின் வேகம் அதிகமிருந்தது. பூம்புகாா் படகுத்துறை வளாகத்தில் ராட்சத அலைகள் எழுந்தன. இதனால், காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்குத் தொடங்கியது. அதையடுத்து, மாலை 4 மணி வரை படகு சவாரி தொடா்ந்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...