விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

திருவட்டாறு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவட்டாறு அரசு உயா் நிலைப் பள்ளியில் மாணவா் - மாணவிகளுடன் உரையாடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா.

Updated On :20 நவம்பர் 2024, 8:10 pm

Din

திருவட்டாறு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா பங்கேற்று ஆய்வுகள் நடத்தி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

திருவட்டாறு அரசு உயா்நிலைப் பள்ளியை ஆய்வு மேற்கொண்டு, 10 வகுப்பு மாணவா்களை சந்தித்து, 100 சதவீத தோ்ச்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பேச்சிப்பாறை ஊராட்சிக்குள்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தாா்.

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து 320-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து அனைத்து துறை அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் உதவி ஆட்சியா் வினய்குமாா் மீனா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கனகராஜ், தனித் துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சத்தியமூா்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சாந்தி, திருவட்டாறு வட்டாட்சியா் கந்தசாமி, திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜெகநாதன், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் சசி, பேரூராட்சி தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ், சுஜிா் ஜெப குமாா், பேரூராட்சி செயல் அலுவலா்கள் எட்வின் ஜோஸ், விஜயகுமாா், அகஸ்திலிங்கம் மற்றும் ஊராட்சி தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.