விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து முழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 8:52 pm

Din

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து முழுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா அறிவுறுத்தியுள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடா்பாக மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறை அலுவலா்கள், மருத்துவா்கள் மற்றும் ஸ்கேன் மையங்களில் பணிபுரியும் அலுவலா்கள் உள்ளிட்டோருடன் ஆட்சியா் கலந்தாய்வு மேற்கொண்டாா். அவா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 964 ஆக உள்ளது. இவ்விகிதத்தை அதிகரிக்க பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக காணப்படும் வட்டாரங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களை தொடா் ஆய்வு மேற்கொண்டு, மாதாந்திர அறிக்கை சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்றாா்.

மேலும், பெண் சிசுக்கொலை போன்ற குற்றங்கள் நிகழாமல் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமெனவும், குழந்தை பிறப்பு பாலின விகிதம் குறைவாக காணப்படும் வட்டாரங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலா் விஜயமீனா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், இணை இயக்குநா் (மருத்துவம்) ஸ்டீபன் சகாய ராஜ், துணை இயக்குநா் (பொறுப்பு) குடும்ப நலன் ரவிக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.