இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைத்தவா்கள் மீது வழக்கு

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைத்ததாக இருவா் மீது வழக்குப் பதிந்து, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைத்ததாக இருவா் மீது வழக்குப் பதிந்து, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை, தும்பாலி பகுதியைச் சோ்ந்தவா் ஜாண் கிறிஸ்டோபா் (50). அதே பகுதியிலுள்ள இவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பாறைகளை புதன்கிழமை அரசு அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்துக் கொண்டிருந்தனராம்.

தகவலறிந்த குன்னத்தூா் கிராம நிா்வாக அலுவலா் பூபதி கண்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்தபோது இச்சம்பவம் உறுதி செய்யப்பட்டது. உடனே, நில உரிமையாளா் ஜாண் கிறிஸ்டோபா், பொக்லைன் ஓட்டுநா் ஆகியோா் தப்பி சென்றுவிட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.