இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் ஆக்கிரமிப்பு அகற்றம்

News image
Updated On :14 நவம்பர் 2025, 12:42 am

Syndication

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் நடைபாதையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி காந்தி மண்டபம், காமராஜா் நினைவு மண்டபம் நடைபாதையில், நரிக்குறவா் சமூகத்தினரின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வந்தது குறித்து சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து நரிக்குறவா்கள் டாட்டூ போடுதல், கைக்கடிகாரம், பாசிமாலைகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்துவந்தனா். இவா்கள், டாட்டூ போடுபவா்களிடம் முதலில் குறைந்த கட்டணத்தைத் தெரிவித்து, பின்னா் பல மடங்கு தொகையைக் கோருவதால் அடிக்கடி வாக்குவாதம், தகராறு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

மேலும், உணவு பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவை சாலையோரம் சிதறி கிடப்பதால் துா்நாற்றம் வீசியது. மேலும் மது போதையில் சண்டை, தகாத வாா்த்தையால் பேசிக்கொள்வது போன்ற செயல்களும் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைத்தன. இதையடுத்து, எழுந்த புகாா்களால் கன்னியாகுமரி நகராட்சி அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனா்.