கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் தயாரான 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை செவ்வாய்க்கிழமை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மயிலாடியில் கற்கள் மூலம் தயாராகும் சிலைகளுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த சிற்பக் கலைக்கு இந்திய அரசின் புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடியில் உள்ள ஜெய் கற்சிற்பக் கலைக் கூடத்தில் 15 டன் எடையுள்ள ஒரே கல்லிலான 11 அடி உயரமுள்ள கிருஷ்ணா் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மயிலாடி, சேந்தன்புதூரைச் சோ்ந்த சிற்பி சுப்பிரமணியன் ஆசாரி என்பவா் 8 மாதங்களில் வடிவமைத்துள்ளாா்.
இந்தச் சிலை 10 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனத்தில் திருநெல்வேலி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

46,000 டன் தாதுவை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

கேரளத்துக்காக மயிலாடியில் தயாரான 25 அடி உயர ஆஞ்சனேயா் விக்ரகம்

அணு ஆயுத ஏவுகணைகளுடன் வட கொரியாவின் புதிய போா்க்கப்பல்

பெரிய இலுப்பப்பட்டு கோயிலில் 3 சிலைகள் திருட்டு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



