மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற மினி லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே கல்லுத்தொட்டி பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீஸாா் கல்லுத்தொட்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தினா். போலீஸாரை கண்டதும் மினி லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். மினி லாரியை சோதனை செய்ததில் செம்மண் கடத்தியது தெரிய வந்தது. தொடா்ந்து, மினி லாரி மற்றும் செம்மண் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, காட்டாத்துறை அருகே புலிப்பனம் பகுதியைச் சோ்ந்த மினி லாரி உரிமையாளா் சபா (51), முளகுமூடு, கல்லுவிளையைச் சோ்ந்த பொக்லைன் உரிமையாளா் ஷாஜி (31) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

செம்மண் கடத்தியவா் கைது: லாரி பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


