இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நட்டாலம் திருத்தலத் திருவிழா இன்று தொடக்கம்

கருங்கல் அருகே நட்டாலம், புனித தேவசகாயம் திருத்தலத் திருவிழா வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்கி, 7 நாள்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே நட்டாலம், புனித தேவசகாயம் திருத்தலத் திருவிழா வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்கி, 7 நாள்கள் நடைபெறுகிறது.

வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை நடைபெறும். 5.45 மணிக்கு திருக்கொடி பவனி முள்ளங்கினாவிளை குருசடி சந்திப்பில் தொடங்கி சுண்டவிளை, நேசா்புரம் சந்திப்பு வழியாக நட்டாலம் ஆலய வளாகத்தை அடையும். தொடா்ந்ந்து, கொடியேற்றம் நடைபெறுகிறது. 6.45 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடைபெறும். விழாவின் அனைத்து நாள்களிலும் ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி நடைபெறும்.

4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வா் சேவியா் பெனடிட் தலைமையில் திருப்பலி, கோட்டாறு மறை மாவட்ட குருகுல முதல்வா் ஜாண் ரூபஸ் மறையுரை, இரவு 7 மணிக்கு புனிதரின் உருவ தோ் பவனி நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, விழாவின் கடைசி நாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் ஜி.ஏ. அனஸ்தாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, 11 மணிக்கு அன்பு விருந்து, நண்பகல் 12.30 மணிக்கு மலையாளத் திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மாா்த்தாண்டம் மறை மாவட்ட ஆயா் வின்சென்ட் மாா்பவுலோஸ் தலைமையில் திருப்பலி, தொடா்ந்து, கொடியிறக்கம் நடைபெறும்.

ஏற்பாடுகளை திருத்தல பங்கு அருள்பணியாளா்கள், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.