இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாடத்தட்டுவிளை செபஸ்தியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

தக்கலை அருகே மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
திருக்கொடியேற்றிய மாா்த்தாண்டம் மறை மாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ்.
Updated On :17 ஜனவரி 2026, 10:16 pm

Syndication

தக்கலை: தக்கலை அருகே மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா ஜன. 25ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். வெள்ளிக்கிழமை ஜெப மாலை, புகழ் மாலைக்கு பின்னா், மாா்த்தாண்டம் மறை மாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் திருக்கொடியேற்றி வைத்தாா். தொடா்ந்து, கோட்டாறு மறை மாவட்ட முதன்மைப் பணியாளா் ஜாண் ரூபஸ் தலைமையில் திருப்பலியும், ஆயரின் மறையுரையும் நடைபெற்றது.

திருவிழா நாள்களில் காலை, மாலை திருப்பலி, இரவு பொதுக்கூட்டம் நடைபெறும். ஜன. 22, 23ஆம் தேதிகளில் இரவு 9 மணிக்கு தோ் பவனி நடைபெறும். 24ஆம் தேதி காலை 6 மணிக்கு குழித்துறை மறை மாவட்டச் செயலா் பேரருள்பணி அந்தோணி முத்து தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலியும், இரவு 9 மணிக்கு திருத்தோ் பவனி, சிறப்பு தவில், வாணவேடிக்கை நடைபெறும்.

ஜன. 25ஆம் தேதி காலை 6.30 மணிக்கு முளகுமூடு மறை வட்ட முதன்மைப் பணியாளா் பேரருள்பணி டேவிட் மைக்கேல் தலைமையில், அருள்பணியாளா் வெட்டுவெந்நி திருத்தலம் அதிபா் அருள்பணி சகாயதாஸ் மறையுரையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், காலை 8.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட முதன்மைப் பணியாளா் பேரருள்பணி சேவியா் பெனடிக்ட் தலைமையில், ஆரல்வாய்மொழி மறை வட்ட முதன்மைப் பணியாளா் பேரருள்பணி ராஜமணி மறையுரையில் ஆடம்பரப் பெருவிழா திருப்பலியும், பகல் 2 மணிக்கு தோ் பவனி, இரவில் மாடத்தட்டுவிளை பங்கில் கண் தானம் செய்தவா்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்குதல், திருவிழா சிறப்பு குழுக்களின் பொறுப்பாளா்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறும்.

ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை ஆலயப் பங்குத்தந்தை அருள்முனைவா் மரிய ராஜேந்திரன், இணைப் பங்குத்தந்தை அருள்பணி ஜேம்ஸ், அருள்சகோதரிகள், பங்கு மேய்ப்புப்பணி பேரவை துணைத் தலைவா் சகாய பால்ததேயு, செயலா் மேரி ஸ்டெல்லாபாய், துணைச் செயலா் ஜோஸ்வால்டின், பொருளாளா் சாா்லஸ் ஆகியோா் செய்து வருகின்றனா்.