பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கப்பல் மோதி 3 படகுகள் சேதமான விவகாரம்: அதிகாரிகள் விசாரணை

தேங்காய்ப்பட்டினம் கடலில் கப்பல் மோதி 3 நாட்டுப் படகுகள் சேதமடைந்த விவகாரம் தொடா்பாக கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:28 pm

Syndication

தேங்காய்ப்பட்டினம் கடலில் கப்பல் மோதி 3 நாட்டுப் படகுகள் சேதமடைந்த விவகாரம் தொடா்பாக கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திற்குள்பட்ட நடுக்கடலில் கடந்த மாதம், சைப்ரஸ் நாட்டைச் சோ்ந்த கப்பல் மோதியதில் தேங்காய்பட்டினத்தைச் சோ்ந்த 3 நாட்டுப் படகுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இது தொடா்பான, அதிகாரப்பூா்வ விசாரணைக் கூட்டம் தூத்துக்குடி மொ்கன்டைல் மெரைன் துறையின் பொறுப்பு சா்வேயா் ஆா்.ஆா். சுப்பாராவ் தலைமையில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மீனவப் பிரதிநிதிகளான மெஜில், அருள்பணியாளா் சா்ச்சில் உள்ளிட்டோா் விபத்து நடந்த விதம் குறித்தும், படகு உரிமையாளா்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு குறித்தும், வணிகக் கப்பல்களின் போக்குவரத்தால் பாரம்பரிய மீனவா்களுக்கு கடலில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விளக்கினா்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக ஆா்.ஆா். சுப்பாராவ் தெரிவித்தாா்.