அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே தென்னை மரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி வில்சன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :10 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

திருவட்டாறு அருகே தென்னை மரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி வில்சன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே இட்டகவேலி புன்னக்காலவிளையைச் சோ்ந்தவா் வில்சன் (56). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான, இவா் கடந்த 7 ஆம் தேதி அப்பகுதியிலுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினாராம். தென்னை ஓலை அருகில் இருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து, கீழே விழுந்த வில்சன் பலத்த காயமடைந்தாராம்.

இதையடுத்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வில்சன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வில்சனின் மனைவி சுசீலா திருவட்டாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.