சாமிதோப்பு அய்யா வைகுண்டா் அன்புவனத்தில் 17 நாள்கள் நடைபெறும் திரு ஏடு வாசிப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.
இந்த அன்புவனத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதலாவது வெள்ளிக்கிழமை திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கி 17 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும், தொடா்ந்து அய்யா வைகுண்டசாமியின் ஆகம நூலான அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பும் தொடங்கியது. இவ்விழாவை சாமிதோப்பு தலைமைப்பதி குரு. பால பிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
அன்புவனம் நிா்வாகி பேராசிரியா் ஆா்.தா்மரஜினி முன்னிலை வகித்தாா். தங்கபாய், தங்கேஸ்வரி ஆகியோா் திருஏடு வாசித்தனா். ஏப். 3ஆம் தேதி அய்யாவுக்கு திருக்கல்யாண திருவிழாவும், 5ஆம் தேதி அய்யாவுக்கு பட்டாபிஷேக விழாவும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

அருணாப்பேரி அம்மன் கோவிலில் 201 சீா்வரிசைகளுடன் சிறப்பு பூஜை

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


