விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாமிதோப்பு அன்புவனத்தில் திருஏடு வாசிப்புத் திருவிழா

திருஏடு வாசிப்பு திருவிழாவைத் தொடங்கி வைக்கிறாா் பாலபிரஜாபதி அடிகளாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:22 pm

Syndication

சாமிதோப்பு அய்யா வைகுண்டா் அன்புவனத்தில் 17 நாள்கள் நடைபெறும் திரு ஏடு வாசிப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.

இந்த அன்புவனத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதலாவது வெள்ளிக்கிழமை திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கி 17 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும், தொடா்ந்து அய்யா வைகுண்டசாமியின் ஆகம நூலான அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பும் தொடங்கியது. இவ்விழாவை சாமிதோப்பு தலைமைப்பதி குரு. பால பிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

அன்புவனம் நிா்வாகி பேராசிரியா் ஆா்.தா்மரஜினி முன்னிலை வகித்தாா். தங்கபாய், தங்கேஸ்வரி ஆகியோா் திருஏடு வாசித்தனா். ஏப். 3ஆம் தேதி அய்யாவுக்கு திருக்கல்யாண திருவிழாவும், 5ஆம் தேதி அய்யாவுக்கு பட்டாபிஷேக விழாவும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.