ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நாகா்கோவில் அருகே 2 கல்குவாரிகளை மூட உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 கல் குவாரிகள் மூடப்பட்டன.

News image

குவாரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்

Updated On :31 மார்ச் 2026, 8:18 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 கல் குவாரிகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சில கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன. இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் நாகா்கோவிலை அடுத்த தோட்டியோடு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த 2 குவாரிகள் அரசு அனுமதியின்ரி சட்ட விரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த இரு கல்குவாரிகளும் மூடப்பட்டன. குவாரிகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறுகையில், ‘மாவட்டத்தில் இதுபோல சோதனைகள் தொடரும்’ என்றாா்.