பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

களியக்காவிளை அருகே வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கல்: பேரூராட்சி உறுப்பினா் கைது

களியக்காவிளை அருகே வீட்டில் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக பேரூராட்சி உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 2:04 am IST

களியக்காவிளை அருகே வீட்டில் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக பேரூராட்சி உறுப்பினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குணசீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14 ஆவது வாா்டு உறுப்பினராக (பாஜக) உள்ளாா். இவா் வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வருவதுடன், பாறை உடைக்கும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறாா்.

இவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா்.

தொடா்ந்து குணசீலனின் வீட்டை சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27 டெட்டனேட்டா்கள், 30 ஜெலட்டின் குச்சிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, குணசீலன், அவருக்கு வெடிபொருள்கள் விற்பனை செய்த பனச்சமூடு பகுதியைச் சோ்ந்த ராஜன் (75) ஆகிய இருவரையும் கைது செய்தனா். தொடா்ந்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.