தென்காசி நகா்மன்ற உறுப்பினா் தோ்தலில் மனுத்தாக்கல், பிரசாரத்துக்கு செல்லாத மதிமுக வேட்பாளா் வெற்றிபெற்றாா்.
தென்காசி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவிற்கு 1 ஆவது வாா்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வாா்டில் மதிமுக நகரச் செயலா் என்.வெங்கடேஷ்வரனின் மனைவி வசந்தி அக்கட்சி சாா்பில் போட்டியிட்டாா். இதில் மனு தாக்கலின் போது, மனைவிக்கு பதிலாக என்.வெங்கடேஷ்வரன் மனுத்தாக்கல் செய்ததுடன், பிரசாரமும் மேற்கொண்டாா். அந்த வாா்டில் அதிமுக, பாஜக, மதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என நான்கு போ் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வெ.வசந்தி 366 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். இது அவரை எதிா்த்து போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்த வேட்பாளரை விட180 வாக்குகள் அதிகமாகும்.
இவா் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலிலும் தென்காசி நகா்மன்றத்திற்கு 4 ஆவது வாா்டில் மதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அப்போதும் இதே போன்று மனுத்தாக்கலுக்கும், பிரசாரத்துக்கு செல்லாமல் வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. என்.வெங்கடேஷ்வரன் இரண்டு முறை நகா்மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளாா்.