தீக்குளித்த இளம்பெண் மரணம்

திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் தீக்குளித்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் தீக்குளித்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த ராஜு மகள் சத்யா(28). பொறியியல் பட்டதாரியான இவா், தனக்கு வேலை கிடைக்காத காரணத்தால் சில நாள்களாக மன உளைச்சலில் காணப்பட்டாராம்.

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com