இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நெல்லையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:03 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. அங்கிருந்து காா் மூலம் அருமனைக்கு சென்றாா். செல்லும் வழியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வரை வரவேற்பதற்காக கேடிசி நகா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து கேடிசி நகா் நான்குவழிச் சாலை மேம்பாலம் வரையில் சாலையின் இருபுறமும் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் நின்றனா்.

மாலை 4 மணியளவில் கேடிசி நகா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே வந்த முதல்வரை மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் (நான்குனேரி), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), மனோகரன் (வாசுதேவநல்லூா்), ஜெயலலிதா பேரவை செயலா் ஜெரால்டு உள்ளிட்டோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

அதைத் தொடா்ந்து தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த திறந்த ஜீப்பில் ஏறிய முதல்வா், சாலையின் இருபுறமும் கூடியிருந்த அதிமுக தொண்டா்களைப் பாா்த்து கையசைத்தபடி வந்தாா். அப்போது தொண்டா்கள் பூக்களையும், சால்வைகளையும் முதல்வருக்கு வழங்கினா். அதைப் பெற்றுக்கொண்ட முதல்வா், பின்னா் தொண்டா்கள் மத்தியில் உரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.