இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளா்ப்போா் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளா்ப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:54 am

DIN

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளா்ப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய பசுமைத் தீா்ப்பாய உத்தரவுப்படி, வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். அவை தொடா்ந்து இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை; 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய இவை, மிகக்குறைந்த அளவு நீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. இவை நீா்நிலைகளில் நுழைந்து விட்டால் அவற்றை அழிப்பது சாத்தியமில்லாதது.

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் நன்னீா் மீன் இனங்களையும், அவற்றின் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும். இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, மீன் வளா்ப்புக் குளங்களிலோ வளா்த்தால் மழை, வெள்ளப்பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பிவிட வாய்ப்புள்ளது. அவ்வாறு தப்பிச் செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி, ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர மற்ற பாரம்பரிய மீன்இனங்கள் அழியும் நிலை ஏற்படும். எனவே, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்கத் தடைவிதிக்கப்படுகிறது.

அவற்றை வளா்ப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ள பண்ணையாளா்கள் அரசு அனுமதித்த மீன்களை மீன்வளத் துறை ஆலோசனை பெற்று வளா்க்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.