தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லை சந்திப்பில் ஆசிரியா் தம்பதி வீட்டில் திருடியவா் கைது; 20 பவுன் நகைகள் மீட்பு

திருநெல்வேலி சந்திப்பில் ஆசிரியா் தம்பதி வீட்டில் திருடிய இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 20 பவுன் நகைகளை மீட்டனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:30 pm

Din

திருநெல்வேலி சந்திப்பில் ஆசிரியா் தம்பதி வீட்டில் திருடிய இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 20 பவுன் நகைகளை மீட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை நடுத்தெருவைச் சோ்ந்தவா் மைக்கேல் நிஷாந்த் (37). வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி லோட்டஸ் மேரி (35). முன்னீா்பள்ளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாா்த்து வருகிறாா்.

இவா்கள் திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் ஒரு வீட்டின் மாடியில் வசித்து வருகின்றனா். கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு, பிற்பகலில் வந்தனா். அப்போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு சுமாா் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள வீடுகள், ஹோட்டல்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனா்.

அப்போது சம்பவம் நடந்ததாக கருதப்படும் நேரத்தில் ஓா் இளைஞா் பைக்கில் ஹெல்மெட் அணியாமல், முதுகில் பை (பேக்) அணிந்து சென்றது தெரிய வந்தது. விசாரணையின் அடிப்படையில், ஆசிரியா் தம்பதி வீட்டில் நகை- பணத்தை திருடிய நபா், சுத்தமல்லி அருகேயுள்ள பழவூா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் என்ற ராமையா (35) என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 20 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.