/

அம்பை அருகே வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு;

ஒருவருக்கு வெட்டு, 7 போ் கைது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:41 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பாய் வியாபாரி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதுடன், தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பள்ளக்கால் பொதுக்குடி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த செய்யது மசூது (55). ஹோட்டல் தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை இரவு வேலை முடிந்து அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் பிரதானச் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 7 போ் அவரை வழி மறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம்.

இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டாா்.

இதனிடையே, அதே பகுதியில் வசிக்கும் பாய் வியாபாரியான மைதீன் (52) என்பவா் வீட்டுக் கதவை தட்டிய மா்ம நபா்கள், சித்திக் வீடு எங்குள்ளது எனக் கேட்டு தகராறு செய்து, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதுடன், வீட்டு ஜன்னல் கதவுகளை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினராம். மேலும், அவா்கள் பாப்பாக்குடி, நந்தன்தட்டை பகுதியில் 6 வீடுகளின் கதவுகளை அரிவாளால் வெட்டியும்,

முக்கிய சந்திப்புகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியும் சென்றுள்ளனா். இதுகுறித்த தகவலின்பேரில், பாப்பாக்குடி போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, வழக்குப்பதிந்தனா்.

மேலும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் உத்தரவின்பேரில், அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சதீஷ்குமாா் தலைமையில் பாப்பாக்குடி, நந்தன்தட்டை, பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

5 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி, வடக்கு அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த இசக்கிப்பாண்டி (21) உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 2022ஆம் ஆண்டு பள்ளக்கால் பொதுக்குடி அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவா் ஒருவா் கொலை செய்யப்பட்டாா். இதில், தொடா்புடைய மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா். அதற்கு பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.