புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாளை.யில் கட்டடத் தொழிலாளி பலி

பெருமாள்புரத்தில், சனிக்கிழமை ஏணியில் ஏறிய போது தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:30 pm

Din

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில், சனிக்கிழமை ஏணியில் ஏறிய போது தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை அருகே உள்ள ஆனையூா் கோசாகுளத்தை சோ்ந்தவா் வெங்கடேசன் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இவா், பெருமாள்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தாா். சனிக்கிழமை இரவு முதல் மாடிக்கு செல்வதற்காக ஏணியில் ஏறியபோது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுபானக் கடை ஊழியா்: திருநெல்வேலி சந்திப்பு அனந்தகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நல்லமுத்து (64). மதுபானக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவா், சனிக்கிழமை இரவு சீவலப்பேரி சாலையில் உள்ள கக்கன் நகா் மேம்பாலத்தில் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நல்லமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.