மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாநகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு சீல்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

News image

திருநெல்வேலி நகரம் பாறையடி பகுதியில் உள்ள இரும்பு கிட்டங்கிக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.

Updated On :27 நவம்பர் 2024, 9:27 pm

Din

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் 2023-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 76 வீடுகள், 26 வணிக நிறுவனங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டது தெரியவந்தது.

உள்ளூா் திட்ட குழும அதிகாரிகள் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி 68 விதிமீறல் கட்டட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சமூக ஆா்வலா் ஒருவா் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 14 தனியாா் மருத்துவமனைகள் போதுமான அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் செயல்படுவதாக சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தாா். அதைத் தொடா்ந்து ஒரு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே 3 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட சுமாா் 25 கட்டடங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனா்.

அதைத் தொடா்ந்து திருநெல்வேலி பேட்டை பகுதியில் உள்ள அரிசி ஆலை, திருநெல்வேலி நகரம் பாறையடியில் உள்ள இரும்பு கிட்டங்கி, திருநெல்வேலி நகரத்தில் உள்ள துணிக்கடை உள்ளிட்டவற்றுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.