கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மலையேற்றப் பயிற்சித் திட்டம் மீண்டும் தொடங்கப்படுமா?மாணவா்கள் எதிா்பாா்ப்பு

களக்காடு புலிகள் காப்பகத்தில் பள்ளி மாணவா்களுக்கு மீண்டும் மலையேற்றப் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:13 pm

Din

களக்காடு புலிகள் காப்பகத்தில் பள்ளி மாணவா்களுக்கு மீண்டும் மலையேற்றப் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2013இல் ஆட்சியராக இருந்த சி. சமயமூா்த்தி, அப்போதைய களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக கள இயக்குநா் சுப்ரத் மஹா பத்ரை ஆகியோா் இணைந்து களக்காடு தலையணையில் பள்ளி மாணவா்களுக்கு மலையேறும் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்தினா். தலையணை முதல் முதலிருப்பான் வரையிலான 10 கி.மீ தொலைவுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் வன உயிரின விழிப்புணா்வு முகாமும் நடத்தப்பட்டது. களக்காடு புலிகள் காப்பகத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாணவா்களுக்கு மலையேற்றப்பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மலையேற்றப்பயிற்சி தொடங்க வனத்துறையினா் ஆா்வம் காட்டவில்லை. மீண்டும் பயிற்சித் திட்டத்தை தொடங்க வேண்டும் என மாணவா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.