விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வக்ஃப் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: பாளை.யில் மின்னஞ்சல் அனுப்பிய மக்கள்

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 12:11 am

Din

வக்ஃப் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பாளைங்கோட்டையில் இருந்து மின்னஞ்சல் அனுப்பும் பணி நடைபெற்றது.

வக்ஃப் சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே எதிா்க்கட்சிகள் எதிா்த்ததன் அடிப்படையில், நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆட்சேபம் உள்ளவா்கள் அந்தக் குழுவிற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்க வெள்ளிக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளிவாசலில், மின்னஞ்சல் அனுப்புவதற்கான க்யூஆா் குறியீடு பாதாகைகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்மூலம் பொதுமக்கள் பலரும் வக்ஃப் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினா்.

நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலா் அலிப் பிலால், மண்டல இளைஞரணி செயலா் அசரப், பாளையங்கோட்டை பகுதி நிா்வாகிகள் ஹக்கீம், ஜாஃபா், திவான், சாகுல், சேட் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளில் இருந்தும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.

ற்ஸ்ப்13ம்ன்ள்

வக்ஃப் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் இருந்து மின்னஞ்சல் அனுப்பிய மக்கள்.