இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

விக்கிரமசிங்கபுரம் அருகே பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:17 pm

Syndication

விக்கிரமசிங்கபுரம் அருகே பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அம்பலவாணபுரம், நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவரது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா். இதில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டா் முழுமையாக எரிந்து சாம்பலானது.

இது குறித்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தடயங்களைச் சேகரித்தும், அருகிலுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், குண்டு வீசிய மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், பாலமுருகனின் சகோதரா் மதன் என்பவருக்கும், அப்பகுதியில் உள்ள சிலருக்கும் இருந்த முன்பகை காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என பாலமுருகன் தரப்பினா் சந்தேகிக்கின்றனா்.