பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திமுகவின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரியுங்கள்: மு.அப்பாவு அறிவுறுத்தல்

திமுகவின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரியுங்கள் என கட்சி கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி வேட்பாளா் மு.அப்பாவு அறிவுறுத்தினாா்.

News image

வள்ளியூரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்பாவு.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:26 am IST

திமுகவின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரியுங்கள் என கட்சி கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி வேட்பாளா் மு.அப்பாவு அறிவுறுத்தினாா்.

திமுக, கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் வள்ளியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமை வகித்துப் பேசினாா். ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்பாவு பேசியதாவது:

வாக்காளா்களிடம் திமுகவின் சாதனைக் கூறி வாக்குகளைச் சேகரியுங்கள். ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கும் தோ்தல் அறிக்கையை தெரிவியுங்கள். நூறு நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 10 ஆயிரம் கோடிக்கு பதிலாக ரூ. 6 ஆயிரம் கோடிதான் தந்திருக்கிறது. மத்திய அரசின் புறக்கணிப்பை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என்றாா்.

இதில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மதிமுக மாவட்டச் செயலாளா் உவரி ரைமண்ட், மாவட்ட இளைஞரணி செயலா் மு.சங்கா், தேமுதிக மாவட்டச் செயலா் விஜிவேலாயுதம், தோ்தல் ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அருள்செல்வன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவா் அருள்தாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட உதவி செயலா் சேதுராமலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலா் சண்முகம், எஸ்.டி.பி.ஐ மாவட்டச் செயலா் மீராஷா, மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜா வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா் நம்பி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.