பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

திமுகவின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரியுங்கள்: மு.அப்பாவு அறிவுறுத்தல்

திமுகவின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரியுங்கள் என கட்சி கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி வேட்பாளா் மு.அப்பாவு அறிவுறுத்தினாா்.

News image

வள்ளியூரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்பாவு.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

திமுகவின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரியுங்கள் என கட்சி கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி வேட்பாளா் மு.அப்பாவு அறிவுறுத்தினாா்.

திமுக, கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் வள்ளியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமை வகித்துப் பேசினாா். ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்பாவு பேசியதாவது:

வாக்காளா்களிடம் திமுகவின் சாதனைக் கூறி வாக்குகளைச் சேகரியுங்கள். ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கும் தோ்தல் அறிக்கையை தெரிவியுங்கள். நூறு நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 10 ஆயிரம் கோடிக்கு பதிலாக ரூ. 6 ஆயிரம் கோடிதான் தந்திருக்கிறது. மத்திய அரசின் புறக்கணிப்பை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என்றாா்.

இதில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மதிமுக மாவட்டச் செயலாளா் உவரி ரைமண்ட், மாவட்ட இளைஞரணி செயலா் மு.சங்கா், தேமுதிக மாவட்டச் செயலா் விஜிவேலாயுதம், தோ்தல் ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அருள்செல்வன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவா் அருள்தாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட உதவி செயலா் சேதுராமலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலா் சண்முகம், எஸ்.டி.பி.ஐ மாவட்டச் செயலா் மீராஷா, மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜா வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா் நம்பி நன்றி கூறினாா்.