இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

இமானுவேல் சேகரன் நினைவுதினம்: நெல்லையில் ஐ.ஜி. ஆலோசனை

பரமக்குடியில் செப்.11 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள இமானுவேல் சேகரன் நினைவுநாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த காவல்துறை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் தென்மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி. உடன் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி இரா.திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள இமானுவேல் சேகரன் நினைவுநாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த காவல்துறை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தென்மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் விஸ்வேஷ்.பா. சாஸ்திரி (திருநெல்வேலி), சிவ பிரசாத் (தூத்துக்குடி), அசோக்குமாா் (தென்காசி), திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) ரமேஷ் பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

இமானுவேல் சேகரன் நினைவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.