
பாளை.யில் சாலையோர உணவகத்தில் தீ விபத்து
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள சாலையோர துரித உணவகத்தில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பொருள்கள் சேதமடைந்தன.

தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரா்கள்
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள சாலையோர துரித உணவகத்தில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பொருள்கள் சேதமடைந்தன.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் பின்புறம் சாலையோரம் ஏராளமான துரித உணவு கடைகள் இயங்கி வருகின்றன. அதில் ஒரு கடையில் புதன்கிழமை பிற்பகல் கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் அங்கு தீ பிடித்து மளமளவென எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து தீயை அணைத்தனா்.
எனினும், கடையில் இருந்த பெரும்பாலான பொருள்கள் எரிந்து சேதமாகின. அந்தக் கடையில் பயன்படுத்தி வந்த மின்கலனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





