பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது

திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லெட்டை பதுக்கி விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 1:59 am IST

திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லெட்டை பதுக்கி விற்பனை செய்ய முயன்ாக இளைஞரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருக்குறுங்குடி காவல் ஆய்வாளா் கண்ணாகாந்தி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருக்குறுங்குடி தனியாா் பள்ளி அருகே உள்ள காலியிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மாவடி ராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்த கபிலன் (22) என்பவரை சோதனை செய்தனா்.

அப்போது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 825 கிராம் கஞ்சா, 325 கிராம் போதை சாக்லெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து கபிலனை கைது செய்தனா்.