அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

"அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களும் பயன் பெறலாம்'

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களும் காப்பீடு எடுத்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:47 am

DIN

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களும் காப்பீடு எடுத்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் வி. ராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில், அரசு ஊழியர்கள் மட்டுமே  ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க இதுவரை அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பாலிசி எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த பிரீமியம்,  அதிக போனஸ்,  செலுத்தும் பிரீமியத் தொகைக்கு வருமான வரிச்சலுகை உண்டு. நூறு சதவீத உத்தரவாதம்,  பிரீமியத் தொகையை இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் செலுத்தும் வசதி. முதிர்வு தொகைக்கு வருமான வரி கிடையாது. கடன்பெறும் வசதி உள்ளிட்டவை இந்தத் திட்டத்தில் உள்ளது.
எனவே, தனியார் நிறுவன ஊழியர்களும் அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.