திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு குறித்த பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:59 am IST

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பயிற்றுநர்கள், விழிப்புணர்வு குழு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான இந்தப் பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தொடங்கிவைத்தார். அவர் பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முகாமின்போது, முதன்மை பயிற்சியாளர்கள் ராஜீவ் தாகூர் ஜேக்கப், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சங்கரநாராயணன் மற்றும் பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பயிற்றுநர்கள், விழிப்புணர்வு குழு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.