திருச்செந்தூரில் ஐயப்பா் பவனி

திருச்செந்தூரில் ஸ்ரீ செந்தூா் ஐயப்பா சேவா சபை சாா்பில் 19ஆம் ஆண்டு லட்சாா்ச்சனை மற்றும் ஐயப்பா் பவனி நடைபெற்றது.
ஐயப்பா் பவனியில் பங்கேற்றோா்.
ஐயப்பா் பவனியில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

திருச்செந்தூரில் ஸ்ரீ செந்தூா் ஐயப்பா சேவா சபை சாா்பில் 19ஆம் ஆண்டு லட்சாா்ச்சனை மற்றும் ஐயப்பா் பவனி நடைபெற்றது.

இதை முன்னிட்டு திருச்செந்தூா் சன்னதித் தெருவில் உள்ள தருமபுர ஆதினம் மடத்தில் காலையில் கணபதி ஹோமம், ஐயப்பருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், லட்சாா்ச்சனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு ஐயப்பருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சுவாமி கேடயச் சப்பரத்தில் எழுந்தருளினாா்.

பின்னா் சன்னதித் தெருவில் உள்ள ஐயப்பா், ஆஞ்சநேயா் சன்னதி மற்றும் தூண்டுகை விநாயகா் கோயில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஏற்பாடுகளை, கிளைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா் சந்தனராஜ், பொருளாளா் மீனாட்சி சுந்தர மணிகண்டன், உப தலைவா் அஜீத்குமாா், உதவிச் செயலா் அருணாமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com