முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலத்தில் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலத்தில் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளியை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறியும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைப்பின் மாவட்டச் செயலா் சண்முகவேல் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, முடிதிருத்தும் தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், முடிதிருத்தும் தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக நியமனம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com