பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மகாகவி பாரதியார் பிறந்த தின விழா

தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி சார்பில் மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
மகாகவி பாரதியார் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
Updated On :20 டிசம்பர் 2020, 10:40 am

DIN

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி சார்பில் மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் சுப்பிரமணியம், கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சண்முகராஜ், மகாத்மா காந்தி நினைவு அறக்கட்டளை தலைவர் திருப்பதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, பாரதியாரின் உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் சண்முகராஜ், மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜு, காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டச் செயலர்கள் சுப்புராயலு, முத்து, சிவப்பிரகாசம், தகவல் அறியும் உரிமை துறை மாவட்டத் தலைவர் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், மகேஷ்குமார், உமாசங்கர் ஆகியோர் பேசினர்.

நிகழ்வில், காங்கிரஸ் கட்சி கடம்பூர் நகரத் தலைவர் ஜெகதீசன், வட்டாரத் தலைவர்கள் அருள்ராஜ் (கயத்தாறு), கந்தசாமி (கழுகுமலை), வர்த்தக அணி மாவட்டத் தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் செல்வராஜ் பாண்டி வரவேற்றார். காங்கிரஸ் இலக்கிய அணி மாநிலச் செயலர் முத்து நன்றி கூறினார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.