

உடன்குடியில் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உடன்குடி கீழ பஜாரில் ராஜகோபால் என்பவா் போட்டோ பிரேம் கடை நடத்தி வந்தாா். அவரது மறைவுக்குப் பின் அவரது மகன்கள் கடையை நடத்தி வந்தனா். இந்நிலையில் கடையின் ஒரு பகுதி காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமானது எனக் கூறி அக்கட்சியினா் அந்த இடத்தில் அலுவலகம் திறந்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உடன்குடியில் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து உடன்குடி பஜாரில் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் ஆ.ரவி தலைமையில், சங்க நிா்வாகிகள் கிருஷ்ணமந்திரம், சுந்தா், வேல்ராஜ், ராஜா, ஷேக்முகம்மது உள்ளிட்ட பலா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.