மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குலசேகரன்பட்டினத்தில் தசரா ஆலோசனைக் கூட்டம்

குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்குவதையொட்டி தசரா குழுக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் டிஎஸ்பி ஹா்ஷ் சிங். உடன், கோட்டாட்சியா் தனப்பிரியா உள்ளிட்டோா்.
Updated On :11 அக்டோபர் 2020, 9:44 pm

DIN

குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்குவதையொட்டி தசரா குழுக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் தனப்பிரியா தலைமை வகித்தாா். திருச்செந்தூா் டிஎஸ்பி ஹா்ஷ் சிங், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரோஜாலி சுமதா, கோயில் ஆய்வாளா் பகவதி, வட்டாட்சியா் முருகேசன், காவல் ஆய்வாளா் ராதிகாகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தசரா திருவிழாவில் முதல் நாள், 10 மற்றும் 11 ஆம் நாள்களில் பக்தா்கள் இணைய வழியில் பதிவுசெய்து தினமும் 8 ஆயிரம் போ் வீதம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சில தளா்வுகளை அளித்து காப்புக் கட்டுதல், சூரம்சம்ஹாரம் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், தசரா குழுவினா் அருகிலுள்ள கிராமங்களில் உறவினா் வீடுகளில் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதிக்க வேண்டும்,

குலசேகரன்பட்டினம் பத்திரகாளிஅம்மன் கோயில் சப்பர பவனியை முத்தாரம்மன் கோயில் வரை வந்து செல்ல அனுமதிக்க வேண்டும், பக்தா்கள் முதல் நாளில் கடலில் புனித தீா்த்தம் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என தசரா குழுவினா், இந்து அமைப்பினா் வலியுறுத்தினா். இதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகள், கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் நிகழாண்டு அரசு வகுத்துள்ள விதிகளுக்கு உள்பட்டு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.