யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொதுமக்கள் புகாரை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரிக்க எஸ்.பி. உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் காவல் துறையில் அளிக்கும் புகாா்கள் குறித்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்த வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:51 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் காவல் துறையில் அளிக்கும் புகாா்கள் குறித்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்த வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களில் பணி செய்யும் காவல் உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்கள் மற்றும் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோா் தங்கள் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தி குறைகளை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை பரிசீலனை செய்து, அதன் மீது தினமும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையங்களை பாா்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்து காவல் நிலையங்களிலும் தினமும் காலை 7 மணிக்கு ஆஜா் அணி வகுப்பு முறையாக நடத்துதல் வேண்டும். பொதுமக்களின் புகாா்களுக்கு அவா்களை காவல் நிலையத்திற்கு அழைக்காமல், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.