யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:49 pm

DIN

தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் ஆலோசனையின்பேரில், ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து கட்சியின் அமைப்புச் செயலா் என். சின்னத்துரை பேசுகையில், தூத்துக்குடி வரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தூத்துக்குடி 3 ஆவது மைல் பகுதியில் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சி.த. செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில், 3 ஆயிரம் போ் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனா். முதல்வருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில், தலைமை நிலைய பேச்சாளா் எஸ்.டி. கருணாநிதி, முன்னாள் எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் தளபதி கே. பிச்சையா, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா்கள் அணிச் செயலா் அக்ரி பி. பெருமாள், பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பி.டி.ஆா். ராஜகோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.