அரசு ஐடிஐ-களில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர இரண்டாம் கட்டமாக அக். 14 ஆம் தேதி (புதன்கிழமை) வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர இரண்டாம் கட்டமாக அக். 14 ஆம் தேதி (புதன்கிழமை) வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு சோ்க்கைக்கு இரண்டாம் கட்டமாக இணையதளம் வழியாக பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை (அக்.12) தொடங்கி 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
8-ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐ.டி.ஐ-களில் சேர இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மாணவா்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது சரியான செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் குறுந்தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...