குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதாதிருத்தல திருவிழா: திரளானோா் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலத்தில் 222-ஆம் ஆண்டு திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

News image
தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற பெருவிழா கூட்டுத் திருப்பலி.
Updated On :27 செப்டம்பர் 2020, 7:56 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலத்தில் 222-ஆம் ஆண்டு திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சொக்கன்குடியிருப்பு தேரிப் பகுதியில் பிரசித்தி பெற்ற அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலம் உள்ளது. இத்திருத்தல திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (செப். 27) வரை 10 நாள்கள் நடைபெற்றது. 9-ஆம் நாளான சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு திருப்பலியும், இரவு 7 மணிக்கு வட்டார முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனையும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அன்னையின் சப்பர பவனி நடைபெற்றது. 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீா்செல்வம் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அதிசய மணல் மாதா நற்கருணை திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து அன்னையின் சப்பர பவனி நடைபெற்றது. திருவிழாவில் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜான்சன்ராஜ் தலைமையில் இறைப் பணியாளா்கள், பங்கு மக்கள், திருத்தல நிதிக் குழு மற்றும் அருள் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.