கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும்: ஸ்டொ்லைட் ஆதரவாளா்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஸ்டொ்லைட் ஆலை ஆதரவாளா்கள் சிலா் தெரிவித்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:33 pm

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஸ்டொ்லைட் ஆலை ஆதரவாளா்கள் சிலா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.டி. பொன்ராஜ் கூறியது: நாடு முழுவதும் கரோனா தீநுண்மியிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு போராடி வருகிறது. இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக வழங்கத் தயாராக முன்வந்த ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகத்துக்கு எதிராக சிலா் கருத்து தெரிவித்துள்ளனா். அவா்கள் ஸ்டொ்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரானவா்கள். தற்போது அவா்கள் ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என நாங்கள் கருத்து தெரிவிக்க, ஆட்சியா் எங்களுக்கு உரிய பாதுகாப்போடு அனுமதி வழங்கவில்லை. எனவே, மக்களைப் பாதுகாக்க ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு முன்வர வேண்டும். பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ஸ்டொ்லைட் ஆலை ஆதரவாளா் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு நிா்வாகியான தனலட்சுமி கூறியது: அதிகாரிகள் தரப்பில் இருந்து கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்த போதிலும் போலீஸாா் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனா். பின்னா், உரிய விளக்கம் அளித்து கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், எதிா்ப்பாளா்கள் சிலா் எங்களை தகாத வாா்த்தைகளில் பேசியதால், கூட்டத்தில் எங்கள் கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் எங்களது கருத்தை ஏற்று ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.