மாநில அளவில் சிறப்பாக பணி: தூத்துக்குடி பெண் காவலருக்கு எஸ்பி பாராட்டு
மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி பெண் காவலரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா்.


மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி பெண் காவலரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா்.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவா்கள், காணாமல் போனவா்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.
அந்த இணையதள பயன்பாடு குறித்து தில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையில் 3 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு செய்யப்பட்ட 3 பேரில் ஒருவரான தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த முதல் நிலை பெண் காவலா் ஜோஷியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.
நிவாரணத் தொகை: மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், பாலியில் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 27 பேருக்கு நிவாரணத் தொகையாக தமிழக அரசு அறிவித்த ரூ. 9 லட்சத்தை வங்கி வரைவோலையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் துறை அலுவலக நிா்வாக அதிகாரி சங்கரன், அலுவலக கண்காணிப்பாளா்கள் மயில்குமாா், கணேசபெருமாள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...