மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

3 நாள்கள் கட்டுப்பாடு எதிரொலி:திருச்செந்தூரில் கோயிலுக்கு வெளியே திருமண நிகழ்ச்சிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெளியே வைத்து வெள்ளிக்கிழமை ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:38 pm

DIN

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, வாரத்தில் 3 நாள்கள் கோயில்களுக்குள் சென்று வழிபட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெளியே வைத்து வெள்ளிக்கிழமை ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழகத்தில் முக்கிய வழிபாட்டுத்தலங்களில் வரும் 23-ஆம் தேதி வரை வாரத்தின் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 நாள்களும் கோயில்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனினும், குறைத்த எண்ணிக்கையில் பணியாளா்கள் மற்றும் அா்ச்சகா்களுடன் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆவணி மாதம் பிறந்துள்ளதால் சுபமுகூா்த்த நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. கோயில்களில் திருமணம் செய்ய விரும்புவோா், வெளியே வைத்து திருமணத்தை நடத்துகின்றனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் வெளியில் வைத்து வெள்ளிக்கிழமை திருமணங்கள் நடைபெற்றன. சன்னதித்தெரு, தூண்டுகை விநாயகா் கோயில் பகுதியில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயில் வளாகம் வெறிச்சோடியது. கூட்டம் கூடுவதைத் தவிா்க்க காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.